வாழும் போது ரத்த தானமும்,
வாழ்ந்த பிறகு
உடல் தானமும்,
கண் தானமும் மனித வாழ்வில் மிகவும் முக்கியமானவை.
விருதுகளும், பாராட்டு பத்திரங்களும் எங்கள் அமைப்பின் சேவைக்காக வழங்கப்பட்டாலும், விலைமதிப்பில்லா மானுட சேவையும்,
மனித நேயமுமே எங்கள் அகிலம் சமூக சேவை மன்றத்தின் ஒற்றை இலக்கு…..
அகர்வால் கண் மருத்துவமனையின் சார்பில் //இன்று 5/9/26/மதியம் 2:30 மணி அளவில்// கண்தானம் வழங்கிய வாரிசுகளுக்கும் பாராட்டு…
நிகழ்வில்… டாக்டர் D.லயனல் ராஜ் அவர்கள்.. அகர்வால் கண் மருத்துவமனை நிர்வாக இயக்குனர்,
நெல்லை பாராளுமன்ற் உறுப்பினர் சி. ராபர்ட் புரூஸ் அவர்கள்,
இந்தியன் நேவி சர்வீஸ் டாக்டர் சைதன்யா அவர்கள்,
நிர்வாகத்தின் சார்பில் அகிலம் சமூக சேவை மன்றத்தின் நிறுவனர் என்ற முறையில் பாராட்டு பத்திரமும் கேடயமும் பெற்ற மகிழ்வான தருணத்தில்…
தன் நலம் கருதாது பொதுநல நோக்கோடு எளிய மக்களின் சேவைக்காக எங்களை இயக்கிக் கொண்டிருக்கும் இந்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி.






